ஹர்ஷ டி சில்வாவுக்கு சவால் விடுத்த டிரான் அலஸ்
இலங்கை அரசாங்கம், VFS குளோபல் நிறுவனத்துடன் கைச்சாத்திட்டுள்ள, மூன்றாம் தரப்பு (அவுட்சோர்சிங்) விசா செயல்முறை ஒப்பந்தத்தை, கணக்காய்வுக்கு உட்படுத்த வேண்டும் என பரிந்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) சவால் விடுத்துள்ளார்.
முன்னதாக, இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த, ஹர்ஷ டி சில்வா தலைமையிலான பொது நிதி தொடர்பான குழு , இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு அல்லது அதன் திருத்தத்தை பரிந்துரைத்திருந்தது.
எவ்வாறாயினும், COPF குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் அனுமதியின்றி அறிக்கை தொகுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை அரசாங்கம் VFS உடன்படிக்கையில் ஒரு ரூபாவைக்கூட செலவழிக்கவில்லை என்றும் நட்டம் ஏற்படவில்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri