சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் பயிற்சி பட்டறை
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் கல்வி அமைச்சும் இணைந்து முன்னெடுக்கும் பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழு வேலைத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான சான்றிதழ் வழங்குதல் மற்றும் அதிபர்களுக்கான பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று (19) மூதூர் பிரதேச செயலாளர் எம். முபாரக் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
தெளிவூட்டல்கள்
மூதூர் வலயக்கல்வி பணிமனையின் பிரதிக் கல்வி பணிப்பாளர் ஹாபிஸ், முறைசாரா கல்வி பிரிவு உதவி கல்வி பணிப்பாளர் ஐஹார் , மாவட்ட செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், மாவட்ட உள சமூக உத்தியோகத்தர் ஆகியோரின் பங்குபற்றலுடன் மூதூர் பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மு.சாபியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் வளவாளராக கலந்து கொண்ட மாவட்ட உள சமூக உத்தியோகத்தர் மு.மு.ஸம்ஸித்தால் சிறுவர் பாதுகாப்பு குழுவின் செயற்பாடுகள், நடைமுறைப்படுத்துவதில் அதிபர்களின் வகிபாகம் போன்ற பல விடயங்கள் குறித்து தெளிவூட்டல்கள் இதன்போது வழங்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஒவ்வொரு எபிசோடுக்கும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா விஜய் டிவி தொகுப்பாளர்கள்... யாருக்கு அதிகம், முழு விவரம் Cineulagam

விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக போகும் பழைய ஹிட் சீரியல்கள்.. எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி News Lankasri
