தொடருந்து பயணச்சீட்டு கட்டணத்தை மீளப்பெறும் வசதி தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்
கொழும்பை தவிர ஏனைய மாவட்டங்களிலும் தொடருந்து பயணச்சீட்டு கட்டணத்தை மீளப்பெறும் வசதிகள் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 25ஆம் திகதி முதல் இந்த புதிய வசதி நடைமுறைக்கு வரவுள்ளது.
யாழில் பெரும் கலவரம்! பொலிஸாரால் தள்ளி விழுத்தப்பட்ட சிறீதரன் எம்.பி - வேலன் சுவாமிகள் உட்பட ஐவர் கைது
வசதி கிடைக்கப்போகும் புகையிரத நிலையங்கள்
இதுவரையில் தொடருந்து பயணச்சீட்டுகளுக்கான கட்டணத்தை மீளப் பெறும் வசதி கொழும்பு கோட்டை மற்றும் மருதானை தொடருந்து நிலையங்களில் மட்டுமே செயல்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், டிசம்பர் 25 முதல் பதுளை, எல்ல, பண்டாரவளை, ஹப்புத்தளை, நானுஓயா மற்றும் ஹட்டன் ஆகிய இடங்களில் குறித்த வசதி கிடைக்கும்.
அத்துடன் அநுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களிலும் சோதனை அடிப்படையில் பணத்தைத் மீளப் பெறும் சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்.
மேலும் ஜனவரி முதல் கண்டி தொடருந்து நிலையத்திலும் குறித்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
Starting Dec 25,Sri Lanka Railways expands ticket refunds beyond Colombo!
— Bimal Rathnayake (@BimalRathnayake) December 20, 2025
For decades,refunds were only at Fort & Maradana.From Dec 25,
✅ Badulla,Ella,Bandarawela, Haputale
✅ Nanuoya,Hatton
✅ Anuradhapura,Jaffna,Batticaloa (Pilot)
Kandy joins d list in Jan! #SriLanka #Railway
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam