இலங்கையில் மரவள்ளிக் கீரை உற்பத்தியாளர்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்பு : இன்றே விரைந்திடுங்கள்
வரலாற்றில் இலங்கையின் பண்பாட்டிற்கும், மரபுகளுக்கும் தனி இடம் உண்டு.
ஆரம்ப நாட்களில் இலங்கையின் சிறப்புக்களை அறிந்தவர்கள் அதை இரசிப்பதற்கும், அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் இலங்கையை நாடி வருவதுண்டு. காலப் போக்கில் இலங்கை பாரம்பரியம் உலகெங்கும் வியாபிக்க இலங்கை மீதான வெளிநாட்டவர்களின் ஈர்ப்பும் வெகுவாக அதிகரித்தது.
குறிப்பாக இலங்கையின் உணவுகளுக்கு உலகளவில் மிகப்பெரிய கிராக்கி உண்டு. அதிலும், முக்கியமாக இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வேறு நாடுகளில் வாழும் மக்களுக்கு நாட்டின் மீதும், நாட்டு உணவுகள் மீதுமான ஏக்கம் உணர்வுபூர்வமானதும் கூட..
இந்தநிலையில், இலங்கையில் விளையும் மரவள்ளிக் கிழங்கும், அது சார் உணவுகளுக்கும் வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உண்டு. மிக அதிக சத்துக்களை மாத்திரம் இன்றி பலரை பட்டினியோடு வாழ விடாமல் உயிர்காத்த உணவாகவும் இந்த மரவள்ளிக் கிழங்கு உண்டு.
இவ்வாறான நிலையில், மரவள்ளிக் கீரையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில், றீச்ஷா நிறுவனம் அக்கறை செலுத்துகின்றது.
குறிப்பாக தாயகத்தில் மரவள்ளிக் கீரை வளர்ப்பாளர்கள், வெளிநாடுகளுக்கு அவற்றை ஏற்றுமதி செய்வதற்காக றீச்ஷாவிடம் அவற்றை கையளிக்க முடியும்.
றீச்ஷா பண்ணை, ஐபிசி தமிழின் யாழ். கலையகம் உள்ளடங்களாக மூன்று இடங்களில் தங்களது கீரைப் பொதிகளை கையளிக்க முடியும். மிகச் சிறந்த விலைக்கு இந்த கீரைப் பொதிகள் பெற்றுக் கொள்ளப்படும்.
மேலதிக தொடர்புகளுக்கு - 0770344949