யாழ். வெடியரசன் கோட்டை பகுதியை முழுமையாக பௌத்த சிங்கள மயமாக்க முயற்சி: ஈஸ்வரபாதம் சரவணபவன் (Photos)

Sri Lankan Tamils Jaffna E Saravanapavan Sri Lankan political crisis
By Theepan 2 மாதங்கள் முன்
Report

இலங்கை முழுவதும் சிங்கள பௌத்த நாடு என்பதனை சர்வதேச மட்டத்தில் வெளிப்படுத்துவதன் நிகழ்ச்சி நிரலே நெடுந்தீவு வெடியரசன் கோட்டை தொடர்பான கடற்படையின் பதாகை அமைப்பு என யாழ் மாவட்ட முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவு வெடியரசன் கோட்டை பகுதியில் அண்மையில் பௌத்த விகாரை அடையாளப்படுத்தல் தொடர்பாக எழுந்த அண்மைய நாள் சர்ச்சைகள் தொடர்பாக நேரடியாக சென்று பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். வெடியரசன் கோட்டை பகுதியை முழுமையாக பௌத்த சிங்கள மயமாக்க முயற்சி: ஈஸ்வரபாதம் சரவணபவன் (Photos) | Tp Project Srilanka As Sinhalese Buddhist Nation

பௌத்த சிங்கள மயமாக்கல்

2007 ஆம் ஆண்டு வெடியரசன் கோட்டை என இது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இங்கு வாழுகின்ற நெடுந்தீவு வாழ் மக்கள் பாரம்பரியமாக இது வெடியரசன் கோட்டை என்றே அடையாளபடுத்தி வருகின்றார்கள்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவர்கள் இது சிங்கள பௌத்திற்க்கு உரிய என்ற போர்வையில் பௌத்த சிங்கள மயமாக்கல் முயற்சியாக இது ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இங்கு தமிழ் பௌத்தம் நிலவியதற்கான சான்றுகளை எத்தனையோ அறிஞர்கள் கூறியிருக்கின்றார்கள்.

நாங்கள் நெடுந்தீவில் இறங்கும் துறைமுகத்தில் இறங்கி வருகை தருகின்ற பொழுது இதன் சரித்திரத்தை வெளிப்படுத்தும் முகமாக சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் சிங்கள பௌத்தமாக திரபுப்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினுடைய அட்டவணைப்படி அவர்கள் எவ்வாறு வடமாகணத்தை சிங்களமயமாக்கலாம் என்று நினைக்கின்றார்களோ அவ்வாறாக அன்றைய ராஜபக்சக்கள் காலம் முதல் இன்றைய ரணில் விக்ரமசிங்க காலம் வரை அவர்கள் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் சிங்களமயமாக்கத்திற்காக எடுத்து வருகிறார்கள்.

இங்கே பயன்படுத்தப்பட்ட சொற்பதங்களும் தமிழில் தான் இருக்கின்றன சில சொற்பதங்கள் தமிழில் தான் இருந்து அழிந்துள்ளதாகவும் இது தமிழ் பௌத்த ஸ்தானமே என்று துறைசார் பேராசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

யாழ். வெடியரசன் கோட்டை பகுதியை முழுமையாக பௌத்த சிங்கள மயமாக்க முயற்சி: ஈஸ்வரபாதம் சரவணபவன் (Photos) | Tp Project Srilanka As Sinhalese Buddhist Nation

தமிழர்களை அடக்கி வைக்கும் முயற்சி

அவற்றையெல்லாம் இப்பொழுது தங்களுடையது என்று இந்த கடற்படையினரை இராணுவத்தினரை விமானப்படையினரை எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு இவர்கள் இங்கே ஒரு அமுக்கத்தை கொடுக்கின்றார்கள்.

எவ்வளவு தூரம் தங்களுடைய ஆதிக்கத்தை பிரயோகிக்க முடியுமோ அதனை செய்து தமிழர்களை அடக்கி தங்களுடையது என்று இப்பொழுது பரவலாக சொல்லிக் கொண்டு போகின்றார்கள்.

அங்கே நிலாவரை கிணற்றிலும் அவ்வாறு தான் நடந்தது குருந்தூர் மலையிலும் இது நடக்கின்றது எல்லா இடங்களிலும் நடக்கின்றது துரதிஷ்டவசமாக எங்களுடைய பலம் குன்றிய இந்த நேரத்தில் இது அவர்களுக்கு வசதியாக போய்விட்டது.

நாங்கள் எங்களுடைய எதிர்ப்புகளை காட்ட வேண்டிய இடத்தில் காட்ட வேண்டும் நாங்கள் எவ்வளவுதான் எதிர்ப்புகளை காட்டினாலும் பாருங்கள் நாவற்குழியில் எவ்வளவு பெரிய விகாரை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

அங்கு பெரிய பெரிய நிகழ்வுகள் நிகழ்ச்சிகள் எல்லாம் நடக்கின்றது. யாழ்ப்பாணத்தில் அன்றைய காலத்தில் பௌத்த விகாரைகளே இல்லாமல் இருந்தது. ஆனால் இப்பொழுது எத்தனையோ இடங்களில் புதிதாக விகாரைகள் முளைத்துள்ளன.

யாழ். வெடியரசன் கோட்டை பகுதியை முழுமையாக பௌத்த சிங்கள மயமாக்க முயற்சி: ஈஸ்வரபாதம் சரவணபவன் (Photos) | Tp Project Srilanka As Sinhalese Buddhist Nation

அதனுடன் இணைந்த விடுதிகள் முளைத்துள்ளன. இப்பொழுது சிங்கள சுற்றுலா பயணிகள் சிங்கள தேசத்திலிருந்து உல்லாச பயணம் என்று சொல்லிக்கொண்டு எத்தனையோ பேருந்துகள் வருகின்றன.

அவற்றுக்குரிய இடங்களும் தயாரிக்கப்படுகின்றன எல்லா வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன எந்த வசதிகளும் இங்கிருந்து போகின்ற உல்லாச பயணிகளுக்கு ஏற்படுத்தப்படவில்லை.

இலங்கை முழுமையான பௌத்த நாடு

இங்கே அவர்களுடைய முழு முயற்சியாக எடுத்துக் கொண்டிருப்பது உலகத்திற்கே இலங்கை முழுமையான ஒரு பௌத்த நாடு என்பதனை வெளிப்படுத்துவதாக நிரூபிப்பதற்காக இதனை தொடர் முயற்சியாக செய்கின்றார்கள்.

நாளைக்கு ரணில் விக்ரமசிங்க சென்று சஜித் பிரேமதாச வந்தாலும் சஜித் பிரேமதாச சென்று அனுகுமாரதிசாநாயக்க வந்தாலும் அல்லது வேறு ஒருவர் வந்தாலும் இதனை தான் செய்யப் போகின்றார்கள்.

இதுதான் நடந்து கொண்டிருக்கின்றது கடந்த 75 வருட காலமாக, தமிழர் தரப்பிலும் நாங்கள் நிறுத்த முடியாமல் இருக்கின்றோம்.

இவற்றையெல்லாம் கண்டு இவ்வாறான அத்துமீறல்களை தடுக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவிற்கும் இருக்கின்றது இந்தியாவிற்கும் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றது என தெரியும்.

ஆனால் அவர்களாலும் கூட இதனை தடுத்து நிறுத்த முடியாமல் இருக்கின்றது. அவர்கள் எல்லோருக்கும் நல்ல பிள்ளைகள் போல் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள்.

யாழ். வெடியரசன் கோட்டை பகுதியை முழுமையாக பௌத்த சிங்கள மயமாக்க முயற்சி: ஈஸ்வரபாதம் சரவணபவன் (Photos) | Tp Project Srilanka As Sinhalese Buddhist Nation

நாங்கள்தான் இந்தியாவிற்கு எல்லாமாகவும் இருக்கின்றோம். இந்தியாவின் வடநாட்டில் இருந்து வந்த பௌத்தம் இங்கு தமிழ் பௌத்தமாக இருந்திருப்பதற்கான சான்றுகள் காணப்படுகின்றது. எல்லாம் இந்தியாவிலிருந்து தான் கொண்டுவரப்பட்டது.

இதனை மாற்றி அமைக்கப் போகின்றார்கள் வரலாற்று தவறு இழைக்கபடுகின்றது. இது இந்தியா தலையிட்டு தடுத்து தமிழர்களுடைய இருப்பை பாதுகாக்க வேண்டிய தருணமாகும்.

பூகோள ரீதியான அரசியல் 

அவர்களையும் குற்றம் சொல்லி பிரயோசனமில்லை பூகோள ரீதியான அரசியல் மாற்றங்களும் அவர்களுடைய செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இது எங்களுடைய சிங்கள பௌத்த அரசாங்கத்திற்கு வசதியாக அமைந்துள்ளது. குறிப்பாக இன்றைய தினம் கடற்படையினருடைய அத்துமீறலும் நெடுந்தீவு இறங்கு துறைமுகத்தில் காணப்படுகின்றது.

நாங்கள் இங்கே வந்து இறங்கு துறைமுகத்தில் பதாகைகளை புகைப்படம் எடுப்பதற்கு கூட பல்வேறுப்பட்ட தடைகளை கடப்படையினர் ஏற்படுத்தியுள்ளனர் .

ஆக மொத்தத்திலே சிங்கள பௌத்தமயமாக்கலுக்கு இலங்கையினுடைய முப்படையையும் ஏகோபித்த வகையில் இந்த அரசு பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Nakskov, Denmark, Faaborg, Denmark, Copenhagen, Denmark

18 May, 2023
மரண அறிவித்தல்

நல்லூர் கல்வியங்காடு, Durban, South Africa

26 May, 2023
மரண அறிவித்தல்

தம்பிலுவில், சென்னை, India, பேர்லின், Germany, London, United Kingdom

25 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் வடக்கு

10 Jun, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

27 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு

29 May, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு 6

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கோப்பாய் வடக்கு, கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை, London, United Kingdom

11 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, பாண்டியன்குளம், கிளிநொச்சி

29 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலி

சுழிபுரம், கண்டி

28 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Toronto, Canada

28 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பளை, உருத்திரபுரம், Toronto, Canada

29 May, 2022
மரண அறிவித்தல்

யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, பேர்ண், Switzerland

26 May, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு

27 May, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கொட்டடி, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France, Markham, Canada

26 May, 2021
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Toronto, Canada

25 May, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, வவுனியா, கனடா, Canada

23 May, 2018
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada, உருத்திரபுரம்

26 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று வடக்கு, அம்பத்தூர், சென்னை, India

26 May, 2021
மரண அறிவித்தல்

மறவன்புலோ, Zürich, Switzerland

23 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2023
மரண அறிவித்தல்

பாண்டிருப்பு, Scarborough, Canada

13 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, கொழும்பு, Harrow, United Kingdom

21 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Maldives, சம்பியா, Zambia, Transkei, South Africa, Windsor Slough, United Kingdom, Preston, United Kingdom

03 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, மட்டக்குளி, கொழும்பு, Ulsteinvik, Norway

04 Jun, 2022
மரண அறிவித்தல்

தம்பிலுவில், Scarborough, Canada

20 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Savigny-le-Temple, France

16 May, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US