இரு நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரவுள்ள சுற்றுலாப் பயணிகள்
கஸகஸ்தான் மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வரவுள்ளதாக ரஸ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
கஸகஸ்தானில் இருந்து அடுத்த மாத முற்பகுதியில் சுற்றுலாப்பயணிகள் வரவுள்ளனர். அத்துடன் ரஸ்யாவில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் மேற்கொள்ளப்படும் பீசீஆர் பரிசோதனைகள் தொடர்பில் இலங்கையின் அதிகாரிகள் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று வீரதுங்க கோரியுள்ளார்.
தற்போது மேற்கொள்ளப்படும் 4 பீசீஆர் பரிசோதனைகளை தாம் எதிர்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.