டயானா கமகேவிற்கு தக்க பதிலடி கொடுத்த ஜனாதிபதி ரணில் - செய்திகளின் தொகுப்பு
போயா தினத்தில் சுற்றுலா ஹோட்டல்களில் மாத்திரம் மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்குமாறு சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே முன்மொழிவு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் தலைமையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போது அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு போயா தினங்களில் மதுபானம் கிடைக்க வழி இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், போயா தினத்தில் சுற்றுலா விடுதிகளில் மட்டும் மதுபானம் வழங்க அனுமதிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது இல்லாத பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில்
பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு,
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 4 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan