பிரேசிலுடனான சுற்றுலாத்துறை மேம்பாட்டு புரிந்துணர்வுக்கு இலங்கை முயற்சி
பிரேசில் நாட்டுடன் சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பான புரிந்துணர்வொன்றை ஏற்படுத்திக்கொள்ள இலங்கை முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.
பிரேசிலுக்கான இலங்கைத் தூதுவர் சுமித் தசநாயக்க இதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளார்.
இது தொடர்பில் பிரேசிலின் வௌியுறவுத்துறை அமைச்சர் அண்மையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கை வரும் பிரேசில் உல்லாசப்பயணிகள்
பிரேசில் நாட்டின் சுற்றுலாப் பயணிகள் ஆசியக் கண்டத்தின் அதிலும் குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பாரியளவில் சுற்றுலாக்களில் ஆர்வம் கொண்டுள்ளனர். அந்நாட்டு அரசாங்கமும் அதற்கான அனுசரணைகளை வழங்கி வருகின்றது.

இந்நிலையில் பிரேசில் நாட்டின் உல்லாசப் பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பது தொடர்பில் பிரேசிலுக்கான இலங்கைத் தூதுவர் சுமித் தசநாயக்க மேற்கொண்ட முயற்சிகளுக்கு அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இனிவரும் காலங்களில் பிரேசிலின் உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு சுற்றுலாக்களை மேற்கொள்வது தொடர்பில் ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri