பொலிஸாரின் அதிரடி சோதனையில் 2,341 துப்பாக்கிகள் பறிமுதல்
இலங்கை பொலிஸார், ஜனவரி 01, 2025 முதல் நாடு முழுவதும் நடத்திய சோதனை நடவடிக்கைகளின் போது மொத்தம் 2,341 துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்டதில் 73 T-56 தாக்குதல் துப்பாக்கிகள், 59 ரிவால்வர்கள் மற்றும் 2,126 பிற துப்பாக்கிகள் அடங்கும்.
சோதனை நடவடிக்கை
இதற்கிடையில், சோதனை நடவடிக்கைகளில் 1,793 கிலோகிராம் 139 கிராம் ஹெரோயின், 3,683 கிலோகிராம் 163 கிராம் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ICE), மற்றும் 16,686 கிலோகிராம் 62 கிராம் கஞ்சா உள்ளிட்ட பெரிய அளவிலான போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், 37 கிலோகிராம் 899 கிராம் கோக்கோயின் மற்றும் 746 கிலோகிராம் 673 கிராம் ஹாஷிஷ் ஆகியவையும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின் போது 790,461 நபர்கள் சோதனை செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கைகளின் விளைவாக, பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 6,641 சந்தேக நபர்களும், நிலுவையில் உள்ள பிடியாணைகளுடன் 73,634 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ISIS அமைப்பிற்கு எதிராக மோசமான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ள அமெரிக்கா! பகிரங்கப்படுத்தியுள்ள ட்ரம்ப்
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri