ஜனாதிபதியை சந்தித்த பாதுகாப்பு உயர் அதிகாரிகள் (Photos)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பாதுகாப்பு பிரிவின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(19) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகவும் முப்படைகளின் தளபதியாகவும் பதவியேற்றதன் பின்னர் மரியாதை நிமிர்த்தம் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சந்திப்பில் கலந்துக்கொண்டவர்கள்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, வான்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன, சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் என்.ஆர். லமாஹேவாகே, இலங்கை கடலோரப் பாதுகாப்புப் படையின் பணிப்பாளர் ஜெனரல் ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்க ஆகியோர் ஜனாதிபதியை மரியாதை நிமிர்த்தம் சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பின்போது ஜனாதிபதிக்கு நினைவு பரிசுகளையும் அவர்கள் வழங்கி வைத்துள்ளனர்.



ஏளனமாகப் பார்த்தார்கள், குழந்தைகள் தான் வெற்றிக்கு காரணம்.. நடிகர் விஜய் தேர்தல் வெற்றிக்கு பின் முதல் அறிக்கை Cineulagam
நடிகர் ஜீவாவின் தந்தை, தயாரிப்பாளர் RB சவுத்ரி விபத்தில் மரணம்! அதிர்ச்சியில் சினிமா துறை Cineulagam
தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால்? விஜய் எடுத்திருக்கும் அசாத்திய முடிவு..கசிந்த தகவல் News Lankasri