இலங்கைக்காக குரல் எழுப்பும் சர்வதேச பொருளாதார நிபுணர்கள்
நோபல் பரிசு வென்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் (Joseph Stiglitz) உட்பட தலைசிறந்த பொருளாதார நிபுணர்கள் குழு, டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைச் சமாளிக்கும் வகையில் இலங்கையின் கடன் மீள் செலுத்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
உலகின் 120 முன்னணி பொருளாதார நிபுணர்கள் குழு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விடுத்துள்ள கோரிக்கைகள்
'டிட்வா' சூறாவளியால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் அழிவின் அளவைக் கருத்தில் கொண்டு, நாட்டின் திருப்பிச் செலுத்துதல்களை நிர்வகிக்கக்கூடிய அளவிற்கு மீட்டெடுக்க புதிய கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய மேம்பாட்டு பொருளாதார நிபுணர் ஜெயதி கோஷ், தாமஸ் பிக்கெட், முன்னாள் அர்ஜென்டினா பொருளாதார அமைச்சர் மார்ட்டின் குஸ்மான் மற்றும் டோனட் எகனாமிக்ஸ் (Doughnut Economics) ஆசிரியர் கேட் ராவரத் உள்ளிட்ட 120 பொருளாதார நிபுணர்கள் இந்தக் கோரிக்கையில் கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய அவசரத் தேவைகள் காரணமாக, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ஏற்கனவே கூடுதல் கடன் பெறப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் கடன்கள் பெற வேண்டியிருக்கும் என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் விளைவாக, இலங்கையின் வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவுகளை உடனடியாக நிறுத்தி வைக்கவும், புதிய சூழ்நிலையில் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்க புதிய மறுசீரமைப்பை மேற்கொள்ளவும் அவர்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 19 மணி நேரம் முன்
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri