அநாகரீகமான தீர்மானத்தை எடுத்திருந்தால் நானே ஜனாதிபதி
ஒழுக்கத்தையும் ஜனநாயகத்தையும் மறந்து விட்டு, அநாகரீகமான தீர்மானங்களை எடுத்திருந்தால், தானே தற்போது நாட்டின் ஜனாதிபதியாக இருந்திருப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அரநாயக்க பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மக்களின் விருப்பமின்றி எந்த பதவிகளையும் ஏற்பதில்லை
ஒழுக்கத்திற்கு விரோதமாக ஜனாதிபதி பதவிக்கு வரப்போவதில்லை என்பதுடன் மக்களின் விருப்பமின்றி எந்த பதவிகளையும் பொறுப்பேற்க மாட்டேன்.
நாட்டில் காணப்படும் கஷ்டமான நிலைமை காரணமாக அனைவரும் நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டும்.
அமைச்சு பதவிகளை ஏற்காது நாடாளுமன்றத்தில் குழு முறைமை ஊடாக ஒன்றாக கைக்கோர்த்து நாட்டை கட்டியெழுப்ப தயார் எனவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.