நாளைய வானிலை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!
இலங்கையின் வானிலையில் தென் கிழக்கில் குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம் காரணமாக, நாளை இரவு முதல் அடுத்த சில நாட்களில் மழை சூழ்ந்த வானிலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, கிழக்கு, வட-மத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீக்கு மேல் கடும் மழை பெய்யக்கூடும்.
மதியம் 1.00 மணிக்குப் பிறகு வேறு இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான கனமழை எதிர்பார்க்கலாம்என்றும் வானிலை மையம் எதிர்வுகூறியுள்ளது