யாழில் முன்னர் சொர்க்க தீவான அழகிய தீவின் இன்றைய நிலை!
இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒரு தீவு மண்டைதீவு (Mandathivu) ஆகும்.
யாழ்.நகருக்கு அண்மையில் அமைந்துள்ள தீவு.யாழ்.குடா நாட்டில் உள்ள 8 தீவுகளில் ஒன்றாகும்.இங்கு முக்கிய தொழிலாக மீன்பிடித்தலும், விவசாயமும் காணப்படுகின்றது. கிட்டத்தட்ட அங்குள்ள அனைவருமே வயல் நிலங்களுக்கு உரித்துடையவர்களாக காணப்படுகின்றனர்.
யாழ்.நகருக்கும் கடலுக்கும் நடுவே அமைந்திருந்ததினால் போர்க்காலத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மண்டைதீவு இருந்தது.
மிக அழகிய கடற்கரைகளும், செல்வச்செழிப்பான வயல் நிலங்களையும், கம நிலங்களையும் கொண்டு வியாபாரத்திலும் சிறந்து விளங்கி தங்களுடைய தேவைகளை தாங்களே நிறைவு செய்த மண்டைதீவு மக்கள் தற்போது காலநிலைகளின் தாக்கத்தின் காரணமாக தமது விவசாய செய்கையினை தொடர்ந்தும் மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.