இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இலங்கையின் பல பகுதிகளில் இன்று (26.3.2026) வெப்பநிலையானது 'எச்சரிக்கை' மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அனுராதபுரம், மன்னார், வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் இந்த அதீத வெப்பம் உணரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நேரம் வெயிலில் இருப்பதோ அல்லது வெளிப்புற வேலைகளில் ஈடுபடுவதோ கடுமையான உடல் சோர்வை ஏற்படுத்தும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்
இவ்வாறான நிலையில் தொடர்ந்து இருப்பது தசைப்பிடிப்பு (Heat Cramps) போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் போதியளவு நீர் அருந்தி உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்குமாறும், தேவையற்ற கடினமான வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் மேலதிக அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க தாக்குதலில் இருந்து தப்பிக்க... இரகசியமாக ஈரானுக்கு மிகப்பெரிய உதவி செய்த பாகிஸ்தான் News Lankasri
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan