நாட்டின் பல பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் வழமைக்கு திரும்பிய கற்றல் செயற்பாடுகள் (VIDEO)
கோவிட் தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் இடை நிறுத்தப்பட்டிருந்த பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் இன்று முதல் முழுமையாக ஆரம்பமாகியுள்ளன.
நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் இன்று அனைத்து வகுப்பு மாணவர்களுக்குமான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, தடிமன், இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்படும் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் எனவும் கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ளன.
கடந்த மாதம் 21ம் திகதி ஐந்தாம் தரத்திற்கு உட்பட்ட மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இந்த மாதம் 8ம் திகதி தரம் 11 முதல் 13 வரையான மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து இன்று முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்குமான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 129 பாடசாலைகளினதும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளும் இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டம்
நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளின் அனைத்து வகுப்புக்களினதும் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாவதையடுத்து வவுனியா மாவட்டத்திலும் அனைத்து பாடசாலைகளும் வழமைக்கு திரும்பியுள்ளன.
வவுனியா மாவட்டத்தில் இன்றையதினம் அதிகளவான மாணவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஆர்வத்துடன் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளனர்.
வவுனியா செய்திகள் - தீசன்
யாழ்ப்பாண மாவட்டம்
யாழ்ப்பாண மாவட்டத்திலும் அனைத்து பாடசாலைகளும் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றையதினம் அதிகளவான மாணவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஆர்வத்துடன் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளனர்.
யாழ்ப்பாண செய்திகள் - கஜி
மட்டக்களப்பு மாவட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 முதல் 9 வரையான தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அண்மையில், தரம் ஒன்று முதல் 5 வரையிலான வகுப்புகளும் 10 முதல் உயர்தர வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், சகல தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் இன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 90 சதவீனமானவர்கள் பாடசாலைகளுக்கு சமுகமளித்திருந்ததாக பாடசாலை அதிபர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
[
மட்டக்களப்பு செய்திகள் - வ.சக்திவேல்
முல்லைத்தீவு
நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிழும் இன்று (22) அனைத்து வகுப்பு மாணவர்களுக்குமான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின்அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ளது.
கடந்த மாதம் 21ம் திகதி தரம் 5 க்கு உட்ப்பட்ட
மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த
மாதம் 8 ம் திகதிமுதல் தரம் 11-தரம் 13 வரையான மாணவர்களுக்கான கற்றல்
நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (22) முதல் அனைத்து
வகுப்பு மாணவர்களுக்குமான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.