நல்லையம்பதி வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவம் இன்று
வரலாற்று சிறப்பு மிக்க நல்லையம்பதி அலங்காரக்கந்தன் மஹோற்சவத்தின் இரதோற்சவ திருவிழா இன்று காலை சுகாதார நடைமுறைகளை கருத்தில்கொண்டு பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கருவரையில் அருள்பாலித்து விளங்கும் அலங்கார கந்தனுக்கும், வசந்த மண்டபத்தில் அருள்பாலித்து விளங்கும் நல்லையம்பதி முருகன், வள்ளி, தெய்வானை, ஆகிய தெய்வங்களுக்கு விசேட அபிசேக, ஆராதனைகள் என்பன இடம்பெற்றன.
இதனை தொடர்ந்து தங்கரத்திருத்தேரில் முருகப்பெருமான் ஏறி உள்வீதி ஊடாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இத் திருவிழா ஆலயபிரதம குரு சிவஸ்ரீ சி.வைகுந்தன் குருக்கள் தலைமையிலான அந்தணர் சிவாச்சாரியர்களால் நடாத்திவைக்கப்பட்டது.
ஆலயத்தின் மஹோற்சவம் கடந்த 13.08. 2021 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்று இரதோற்சவமும், நாளை தீர்த்த உற்சவமும் இடம்பெற்று பின்னர் மாலை கொடியிறக்கத்துடன் இனிதே மஹோற்சவம் நிறைவடையும்.





பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு விழுந்த பேரிடி... இந்தியாவால் கடும் பாதிப்பில் காரீஃப் பயிர்கள் News Lankasri

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam
