மின் தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ள நேரம்! வெளியானது புதிய அறிவித்தல்
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேரம் தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாட்டின் சில பகுதிகளுக்கு இன்று மாலை 6 மணி முதல் 7:45 வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மேலும் சில பகுதிகளுக்கு இன்றிரவு 7:45 முதல் 9:30 வரை மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
செயலிழந்துள்ள களனிதிஸ்ஸ அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கிகள் இதுவரை வழமைக்கு திரும்பாத நிலையிலேயே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.