இலங்கையை சர்வதேசத்தின் கால்பந்தாக மாற்றுவதற்கு எதிராக வீரவங்ச உட்பட நாங்கள் இணைந்துள்ளோம்! - தயாசிறி
இலங்கையை சர்வதேசத்தின் கால்பந்தாக மாற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராகவே விமல் வீரவங்ச உட்பட அனைவரும் இணைந்து செயற்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
குருணாகலில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், நாங்கள் நேர்மையாக அரசாங்கத்தை பாதுகாப்பது போல், கூறும் அனைத்துக்கும் கைகளை தூக்கும் அளவுக்கு முதுகெலும்பில்லாதவர்களாக மாற நாங்கள் தயாரில்லை.
எமக்கென்று ஒரு நிலைப்பாடு உள்ளது. அதற்கு அமையவே செயற்படுவோம். எம் நாட்டை சர்வதேசத்தின் கால்பந்தாக மாற்ற முயற்சிக்கும் சக்திகளுக்கு எதிராகவே வீரவங்ச உட்பட கட்சிகளாகிய நாங்கள் அனைவரும் இணைந்து செயற்படுவோம்.
வேறு காரணங்களுக்காக அல்ல எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
