இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து வெளியாகவுள்ள வாய்மூல அறிக்கை
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பில் அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் இராஜதந்திர சமூகத்துடனும் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் அதன் விடயங்கள் பகிர்ந்துகொள்ளப்படும் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மனித உரிமை நிலைமை
அதன்படி உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான வரைவுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் கிடைத்தவுடன், டிசம்பருக்குள் அது செயற்பாட்டுக்கு வரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 53வது அமர்வுகள் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
மேலும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து நாளைய தினம் வாய்மூல அறிக்கை ஒன்றை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
