உயர்தரப் பரீட்சையில் நடைபெறாத பாடங்களுக்கான நேர அட்டவணை வெளியீடு!
சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் நடைபெறாத பாடங்களுக்கான நேர அட்டவணை இன்று (10) பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நடைபெறாத பாடங்களை 2026 ஜனவரி மாதம் 12 ஆம் திகதி முதல் ஜனவரி 20 ஆம் திகதி வரை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஐந்து மாகாணங்களிலும் சுமார் ஒரு இலட்சம் (101,000) மாணவர்கள் உயர்தரப் பரீட்சை எழுதுகின்றனர்.
உயர்தரப் பரீட்சை
இவர்களில் திடீர் பேரழிவு காரணமாக இறந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும், மேலும் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், உயர்தரப் பரீட்சை நடைபெற்ற திகதிகளில் பரீட்சை எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளதாகவும், ஆரம்ப மதிப்பீடு பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் பெப்ரவரி 14 முதல் மார்ச் 02ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri