ஒரு வருடத்தில் மாற்றத்திற்கான பல முக்கிய தீர்மானங்கள்: ரில்வின் சில்வா பெருமிதம்
நாட்டின் பரிமாண மாற்றத்திற்கான பல முக்கிய தீர்மானங்களை ஒரு வருட காலத்தில் எடுத்துள்ளதோடு அதில் நாம் பெரும் மகிழ்ச்சி கொள்வதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடரந்துரையாற்றிய அவர்,
“கடந்து வந்த ஒரு வருடத்தில் எமக்கு பெரும் சவால்கள் இருந்தன. அதிகம் முயற்சித்தோம், ஒரு வருடம் கடந்தது தெரியவில்லை. வேகமாக சென்றுள்ளது.
சாதாரண அரசியல்வாதிகள்
நாங்கள் இந்த நாட்டில் பொருளாதாரம் மற்றும் சமூக, கலாசார மாற்றத்தை ஏற்பத்துவதே வாக்குறுதியாகும். அதை சுலபமாக செய்துவிட முடியாது. நடைமுறையில் இருந்த பழைமையை மாற்ற முற்படும் போது அதன் தாக்கங்கள் பலமாக இருக்கும்.
அதற்கு முகம் கொடுத்தே முன் செல்ல வேண்டியுள்ளது. எமது முதல் படிமுறை புதிய அரசியல் கலாசாரம். அதாவது, மக்கள் பணத்தை வீணடிக்காத, ஊழல் மோசடி, நெருக்கமானவர்களுக்கு வரப்பிரதாசம் வழங்கல் ஆகியவற்றில் பாரிய மாற்றம் நிகழ்ந்துள்ளன்.
ஜனாதிபதி முதல் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாவரும் ஊழலற்ற, கப்பம் பெறாதவர்களாக உள்ளனர். அதை நான் உறுதிப்படுத்துகிறேன். அரசியல் வாதிகளின் வரப்பிரசாதங்கள் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளன.
சாதாரண அரசியல்வாதிகளாக உள்ளனர். 2048ஆம் ஆண்டே நாட்டை மாற்ற முடியும் என சொன்னார்கள். ஆனால் நாம் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்தோம்.
மேலும் பல நிவாரணங்களை செய்துள்ளோம். அரசாங்கத்தின் செலவுகளை குறைத்து அர்ப்பணிப்புள்ள ஒரு அரசாங்கம் என்பதை காட்டியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




