ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை! நிகழ்ச்சி நிரலுக்குள் உள்ளடக்கம்!
ஜனாதிபதி மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையிலான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்குமாறு சபாநாயகர், நாடாளுமன்ற பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதேவேளை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பையும் பலப்படுத்துமாறு, தாம் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இன்று நடப்பு விடயங்கள் தொடர்பில் சபாநாயகருக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் பிற்பகல் 3மணிக்கு மெய்நிகர் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது
ஏற்கனவே இன்று நாடாளுமன்றில் கூட்டப்படவிருந்த கட்சி தலைவர்களின் கூட்டம், பாதுகாப்பு காரணமாக ரத்துச்செய்யப்பட்டது.