குழு மோதலில் முச்சக்கர வண்டி சாரதி கொலை! மற்றொருவர் காயம்
பாணந்துறை - பின்வத்த பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
உயிரிழந்தவர் பின்வத்த, உபோசதாராம வீதியைச் சேர்ந்த 53 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியான மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பண முரண்பாடு தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும், கொலை செய்த நபர் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தலையில் பலத்த காயங்களுடன் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் குறித்த முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பாணந்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் பின்வத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
