யாழ். கொழும்புத்துறை பகுதியில் போதை மாத்திரைகளுடன் மூவர் கைது
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்புத்துறை பகுதியில் நீண்ட நாட்களாக போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நே்று (20) யாழ்ப்பாணம் பொலிஸ் போதை பொருள் ஒழிப்பு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இரகசிய தகவல்
இது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது 180 போதை மாத்திரைகளுடன் 18, 24 ,22 வயதுடைய 03 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் கொழும்புத்துறையை சேர்ந்த மூன்று இளைஞர்களாவர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 21 மணி நேரம் முன்
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam