சுவிஸ் தடுப்புக்காவலில் உயிரிழந்த மூன்று இலங்கைத் தமிழர்கள் - நீதிகோரி மக்கள் போராட்டம்

Sri Lanka Asylum Seeker Switzerland
By Murali Jul 07, 2022 10:00 PM GMT
Report

சுவிஸ் தடுப்புக்காவலில் மூன்று இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தமிழர்களை வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடுகடத்தும் கொள்கைக்கு முடிவு கட்டவேண்டும் என்றும், நீதி வழங்கவேண்டும் என்றும் கூறி சுவிட்சர்லாந்தில் பேரணிகளில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

பேசலில் அமைந்திருக்கும் Bässlergut நாடுகடத்தல் சிறை ஒன்றின் முன் பதாகைகளுடன் கூடிய போராட்டக்காரர்கள் பலர், சுவிட்சர்லாந்து தமிழர்களை நாடுகடத்துதற்கெதிராக கோஷம் எழுப்பினார்கள்.

சுவிஸ் அரசு இலங்கை அரசுடன் கைகோர்த்து இந்த அநியாய செயலில் ஈடுபடுவதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

சுவிஸ் தடுப்புக்காவலில் உயிரிழந்த மூன்று இலங்கைத் தமிழர்கள் - நீதிகோரி மக்கள் போராட்டம் | Three Sri Lankan Tamils Died In Swiss Custody

தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் மூவர் உயிரிழப்பு

சுவிஸ் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த போராட்டங்கள் துவங்கியுள்ளன.

2018ஆம் ஆண்டு 28 வயது தமிழ்ப் பெண் ஒருவர் சிறையில் உயிர்ழந்தது தொடர்பான வழக்கில், தொடர்புடைய சுவிஸ் பாதுகாவலர்கள் சிலர், சென்ற ஆண்டு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்.

அந்த இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற நிலையில், அந்த காவலர்கள் மருத்துவ உதவியளிக்க தாமதித்ததால் அந்தப் பெண் உயிரிழந்தார். உடலில் ஆடை ஏதும் இல்லாமல், முகம் குப்புற, அவர் தரையில் கிடந்ததைக் குறித்த செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

2022ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 15ஆம் திகதி, Nesurasa Rasanayagam என்பவர் சுவிட்சர்லாந்திலுள்ள Gampelen என்ர இடத்தில் அமைந்திருந்த முகாமில் உயிரிழந்தார். இரண்டு வாரங்களுக்குப் பின் அவர் உயிரிழந்ததாக மட்டும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

ஆனால், அவர் எதனால் இறந்தார் என்பது அதிகாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்படவில்லை. அவரது உடலையாவது கொடுங்கள் என அவரது குடும்பத்தினர் கெஞ்சியும், அவர்களுடைய விருப்பத்துக்கு மாறாக அவரது உடல் சுவிட்சர்லாந்திலேயே தகனம் செய்யப்பட்டது.

சுவிஸ் தடுப்புக்காவலில் உயிரிழந்த மூன்று இலங்கைத் தமிழர்கள் - நீதிகோரி மக்கள் போராட்டம் | Three Sri Lankan Tamils Died In Swiss Custody

வேலை செய்யும் உரிமை மறுப்பு

சென்ற மாதம், மற்றொரு தமிழ் புகலிடக்கோரிக்கையாளரான Naguleswaran Vijayan தற்கொலை செய்துகொண்டார். இந்த மரணங்கள், சுவிட்சர்லாந்தின் புகலிட மற்றும் புலம்பெயர்தல் கொள்கையின் குரூரத்தை வெளிப்படுத்துவதாக பேரணிகளில் ஈடுப்பட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

உதாரணமாக, வேலை செய்து வீட்டுக்கு பணம் அனுப்பும் நம்பிக்கையில் சுவிட்சர்லாந்துக்கு வந்த, திருமணமானவரும் மூன்று பிள்ளைகளை உடையவருமான Nesurasa, 7 ஆண்டுகள் சுவிட்சர்லாந்தில் செலவழித்தும், அவருக்கு வேலை செய்யும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் தடுப்புக்காவலில் உயிரிழந்த மூன்று இலங்கைத் தமிழர்கள் - நீதிகோரி மக்கள் போராட்டம் | Three Sri Lankan Tamils Died In Swiss Custody

நாளொன்றிற்கு எட்டு சுவிஸ் ஃப்ராங்குகள் மட்டும் அவருக்கு அவசர உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இப்படி, சுவிஸ் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர்கள் இந்த மூன்று பேர் மட்டுமல்ல என்கிறார்கள் பேரணிகளில் இறங்கியுள்ளவர்கள்.

பெடரல் அமைப்பின் காரணமாக அதைக் குறித்த தெளிவான புள்ளிவிவரங்கள் இல்லை என்று கூறும் அவர்கள், ஆனாலும், ஒவ்வொரு வழக்காக கையில் எடுத்து, ஒவ்வொருவருக்கும் நீதி கிடைக்க போராடுவோம் என்கிறார்கள்.

மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US