பேராதனை பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் மூவர் பதவியிலிருந்து நீக்கம்
பேராதனை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மற்றும் இரண்டு உயர் அதிகாரிகள் உடனடியாக பல்கலைக்கழக நிர்வாகத்தால், பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
பணி பொறியாளர் மற்றும் பணி கண்காணிப்பாளர் ஆகியோரே ஏனைய இருவர்களாவர்.
பல்கலைக்கழக நிர்வாகத்தின் முன் அனுமதி இன்றி இந்த மூன்று அதிகாரிகளும், பணி நேரத்தில் பதிவாளரின் வீட்டைப் பழுது பார்ப்பதற்காகத் தொழிலாளர்கள், பல்கலைக்கழக வேலைத் துறையின் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அண்மையிலேயே நியமனங்களை, ஏற்றதாகவும், அவர்கள் நன்னடத்தை காலத்திலேயே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மூன்று அதிகாரிகளும் தங்கள் விளக்கத்தைச் சமர்ப்பித்த பின்னரே, பணிகளிலிருந்து தடை செய்துள்ளதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளது.
