இலங்கையில் அதிகரிக்கும் ஒமிக்ரோன் தொற்றாளர்கள்! மேலும் மூவர் அடையாளம்
உலகத்தை தற்போது அச்சுறுத்தி வரும் ஒமிக்ரோன் திரிபுடன் மேலும் மூவர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, நாட்டில் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரோன் திரிபு காரணமாக பல நாடுகள் தமது கட்டுப்பாடுகளை இறுக்கமாக்கியுள்ளன.
மேலும், எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகையின் போது மக்கள் அவதானமாக செயற்படுமாறும், கட்டுப்பாடுகளை மீறினால் அதன் பின்னர் கோவிட் தொற்றின் மற்றுமொரு கோரத் தாண்டவத்திற்கு முகம்கொடுக்க நேரிடும் எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.