கொக்குத்தொடுவாயில் யானை துரத்தியதில் மூவர் காயம்
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் தெற்கு பகுதியில் யானை துரத்தியதில் கண்ணிவெடி அகற்றும் மூன்று பெண் பணியாளர்கள் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று(20.01.2025) மாலை இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு கொக்குதொடுவாய் தெற்கு கிராமேசேவகர் பிரிவிற்குட்பட்ட வேம்படி சந்தியில் இருந்து வெலிஓயா செல்லும் பாதை பகுதியில் காட்டுப்பகுதிக்குள் கண்ணிவெடி பிரிவை சேர்ந்த 10 பேர் கொண்ட குழு வேலை செய்து கொண்டிருந்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
குறித்த பகுதியில் திடீரென யானை ஒன்று வந்து வேலை செய்துகொண்டிருந்தவர்களை துரத்தியுள்ளது. யானை துரத்தியதை கண்டவுடன் பயத்தில் பணியாளர்கள் ஓடியதுடன் அதன்போது, 3 பெண் பணியாளர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், காயமடைந்த மூவரும் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri
