நாடாளுமன்றத்தில் மூன்று சட்டமூலங்கள் நிறைவேற்றம்!
நாடாளுமன்றத்தில் மூன்று சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த சட்டமூலங்கள் மீதான இரண்டாம் மதிப்பீட்டு விவாதம் நேற்று(03.09.2024) இடம்பெற்றது.
இதற்கமைய வெளிநாட்டுத் தீர்ப்புக்களை பரஸ்பரம் ஏற்று அங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும் வலுவுறுத்துதல் சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் என்பன நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
திருத்தங்கள்
வெளிநாட்டுத் தீர்ப்புக்களை பரஸ்பரம் ஏற்று அங்கீகரித்தல், பதிவுசெய்தல் மற்றும் வலுவுறுத்துதல் சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் ஆகிய சட்டமூலங்களுக்கு குழுநிலையில் திருத்தங்கள் இணைக்கப்பட்டு, திருத்தங்களுடன் இவை நிறைவேற்றப்பட்டன.
அதேநேரம், வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் திருத்தமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈரான் விடுத்த மிரட்டல்... கத்தார் தளத்தில் இருந்து மொத்த போர் விமானங்களையும் வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி., இந்தியா தயாரிக்கவுள்ள புதிய பினாகா ரொக்கெட் அமைப்பு News Lankasri

மெட்டி ஒலி சீரியல் புகழ் நடிகை ரேவதி இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?... லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
