துப்பாக்கிகளுடன் மூவர் கைது
உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கேகாலை, நூரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல்லேபோக பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கித்துல்கல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, இரத்தினபுரி, வெலிகோபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரகஹமடித்த பிரதேசத்தில், வெலிகோபொல பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது உள்நாட்டுத் துப்பாக்கிகள் இரண்டுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அக்குரெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 25, 28 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு
கைது செய்யப்பட்டுள்ளனர்.
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan