துப்பாக்கிகளுடன் மூவர் கைது
உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கேகாலை, நூரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல்லேபோக பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கித்துல்கல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, இரத்தினபுரி, வெலிகோபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரகஹமடித்த பிரதேசத்தில், வெலிகோபொல பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது உள்நாட்டுத் துப்பாக்கிகள் இரண்டுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அக்குரெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 25, 28 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு
கைது செய்யப்பட்டுள்ளனர்.

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
