இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சாவுடன் மூவர் கைது
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக தயார் நிலை வைக்கப்பட்டிருந்த 364 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
நாகபட்டினம், வேட்டைக்காரனிருப்பு, நாலுவேதபதி பகுதியிலேயே இந்த கஞ்சா நேற்று (18.2.2024) கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்கள் பயன்படுத்திய பைபர் படகொன்றையும் நாகபட்டினம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது அக்கரைப்பேட்டை, நாகபட்டினம், வேட்டைக்காரனிருப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். சுன்னாகம் பகுதியில் கஞ்சா மீட்பு
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றில் இருந்து நேற்றிரவு இரண்டு கிலோ கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபர் ஒராவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸாரிம் ஒப்படைக்கப்பட்டார்.
அவரை மல்லாகம் நீதிமன்றத்தில்
முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
