நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க மூவரிற்கு தடை - செய்திகளின் தொகுப்பு
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய ஆகியோர் நாடாளுமன்ற செயற்பாடுகளில் இருந்து ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
அக்டோபர் 20ஆம் திகதி அன்று நாடாளுமன்ற நூலக வளாகத்தில் மேற்குறிப்பிட்ட மூவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அவர்கள் நாடாளுமன்ற செயற்பாடுகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்ட நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழுவின் அறிக்கையிலேயே இந்த இடைநிறுத்த உத்தரவு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவை உள்ளிட் மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கண்ணாடியை திறந்ததும் அசுர வேகத்தில் தாக்கிய Eastern Indigo Snake... பதறவைக்கும் வைரல் காணொளி! Manithan

அவர்களின் நாகரீகம் இதுதானா? மரியாதைக்கு கூட என்னிடம் கேட்பதில்லை; கவிஞர் வைரமுத்துவின் வைரல் பதிவு! Manithan
