இந்தியாவைப் போன்று இலங்கையும் அச்சுறுத்தல் நிலையிலேயே உள்ளது
அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியாவைப் போன்று இலங்கையும் மீண்டும் கோவிட்-19 பரவல் அதிகரிக்கக் கூடிய அச்சுறுத்தல் நிலைமையிலேயே உள்ளது என விசேட வைத்திய நிபுணர் தீபா கமகே தெரிவித்துள்ளார்.
எனினும் அந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகாமலிருப்பதற்கு கோவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஒமிக்ரோன் தொற்றினால் ஏற்படக் கூடிய அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காகவே 11 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையான ஒரு வார காலத்தில் விரைவாக தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளோம்.
எனவே இந்த விடுமுறை நாட்களைப் பயன்படுத்திக் கொண்டு சகலரும் விரைந்து தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறில்லை எனில் கோவிட் அச்சுறுத்தலிலிருந்து மீள்வது கடினமாகும் என குறிப்பிட்டார்.





7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
