தனிமைப்படுத்தல் மையத்திற்கு மதுபானம் கொண்டு சென்றவர்கள்! நீதிமன்றின் அதிரடி நடவடிக்கை
வட்டுக்கோட்டை தனிமைப்படுத்தல் மையத்திற்கு மதுபானத்துடன் சென்ற இருவருக்கு மல்லாகம் நீதிமன்றம் தனிமைப்படுத்தலுடன் எதிர்வரும் 27ம் திகதிவரை விளக்கமறில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 16.07.2021 அன்று, வட்டுக்கோட்டை கோவிட் தனிமைப்படுத்தல் மையத்திற்குள் தனிமைப்படுத்தப்பட்டவருக்கு மதுபானம் வழங்குவதற்காக இருவர் சென்றுள்ளனர்.
இதனையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸாரால் அவர்கள் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போதே இருவருக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.