ஆடைத்தொழிற்சாலை திறந்தால் விளைவுகளை பொறுப்பு வாய்ந்தவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் - ரவிகரன்

Mullaitivu Pcr test Garment
By Independent Writer Jun 06, 2021 05:30 PM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை திறக்கப்படுவதால், ஏற்படப்போகும் சகல விளைவுகளையும் உரிய பொறுப்பு வாய்ந்தவர்களே ஏற்றுக்கொள்ளவேண்டும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

குறித்த புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் மிகப் பாரிய அளவில் கோவிட் தொற்று ஏற்பட்டமையினால் தொழிற்சாலை கடந்த மாதம் மூடப்பட்டிருந்தது.

இவ்வாறு மூடப்பட்டிருந்த ஆடைத் தொழிற்சாலை 07.06.2021 நாளை மீளத் திறக்கப்படவுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும், வெளி மாவட்டத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் 10பேருக்கு கடந்த மாதம் எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அவ்வாறு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொண்ட 10பேரில், 06பேருக்கு கோவிட் தொற்று இருப்பதாகப் பரிசோதனை முடிவுகள் வெளியாகியிருந்தன.

அதனைத்தொடர்ந்து அங்கு பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கும் கோவிட் தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த மே - மாதம் 17ஆம் திகதி குறித்த புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டிருந்தது.

அதனையடுத்து அங்கு பணியாற்றியவர்கள் சகலருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அந்த பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது மிக பாரிய அளவில் அதிகரித்திருந்தது.

இதனால் குறிப்பிட்டளவு காலம் முல்லைத்தீவு, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பல பொலிஸ் பிரிவுகளும் முடக்கப்பட்டிருந்தன. இவ்வாறாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர், மிக அதிகளவில் அதிகரிக்கக் காரணமாக இருந்த இந்த ஆடைத் தொழிற்சாலையினை 07.06.2021 நாளையதினம் மீளவும் திறக்க இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

இது தொடர்பாகப் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும், புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள புத்திஜீவிகள் எனப் பலரும் என்னுடன் தொடர்புகொண்டு தெரியப்படுத்தியிருந்தனர். எனவே இது தொடர்பிலே நான் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் க.விமலநாதன் மற்றும், முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உமாசங்கர் உள்ளிட்டவர்களுடன் தொடர்புகொண்டுபேசியிருந்தேன்.

உரிய வகையில் சுகாதார விதிமுறைகள் பேணப்பட்டு, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டே குறித்த ஆடைத்தொழிற்சாலையினைத் திறக்கவிருப்பதாக அவர்களால் என்னிடம் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை தொடர்ச்சியாக அங்கு இடம்பெறும் நடவடிக்கைகளைச் சுகாதாரத் தரப்பினர் கண்காணிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த சூழ் நிலையில் குறித்த ஆடைத் தொழிற்சாலையினைத் திறப்பது மிக ஆபத்தானதென அங்குள்ள புத்திஜீவிகளும் மக்களும் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு ஆடைத் தொழிற்சாலையினை மீளத் திறப்பதனை அவர்கள் விரும்பவில்லை. அத்தோடு ஏற்கனவே குறித்த ஆடைத் தொழிற்சாலையில் முறையாகச் சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தால் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளை முடக்க வேண்டியிருந்திருக்காது.

சாதாரண கூலித் தொழிலாளர்கள் தொடக்கம் அனைவருடைய வாழ்வாதாரமும் இவ்வாறு முடக்கப்பட்டிருக்காது. எனவே இந்நிலையில் குறித்த ஆடைத் தொழிற்சாலை மீளத் திறக்கப்படுமானால், அதனால் ஏற்படும் சகல விளைவுகளையும், இதனோடு தொடர்புடைய பொறுப்பு வாய்ந்தவர்களே ஏற்றுக்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US