யாழ்.தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பம் (Video)
வரலாற்றுச்சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
இந்த நிகழ்வு நேற்றையதினம் (16.08.2023) ஆரம்பமாகியுள்ளது.
ஓகஸ்ட் 25ம் திகதி காலை 9 மணிக்கு பூங்காவனமும் , ஓகஸ்ட் 26ம் திகதி கைலாச வாகனமும் , ஓகஸ்ட் 29ம் திகதி சப்பறத் திருவிழாவும் , ஆகஸ்ட் 30ம் திகதி காலை 8 மணிக்கு தேர் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
ஆகஸ்ட் 31ம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் அன்று மாலை 5 மணிக்கு மௌனத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
இந்த கொடியேற்ற திருவிழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.