யாழ்.தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த ஆனிப்பொங்கல்(Video)
வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த ஆனிப்பொங்கல் இன்று(04.07.2023) அதிகாலை 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த வருட ஆடி குளிர்த்தி பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னரான காலத்தில் முருகப்பெருமானுக்கு விசேட பூசைகள் நடத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய நடுநிசி இரவு 12 மணியளவில் ஆலய பூசகர்கள் பெருங்கடலும் தொண்டமானாறு வாவியும் இணையும் இடத்திற்கு சென்று வெள்ளை துணியினால் வாய்கட்டப்பட்ட மண் குடத்தில் கடல் நீர் எடுத்து வந்து விசேட பூஜை வழிபாடுகள் நடத்தியுள்ளனர்.
விசேட பூசைகள்
ஆலய மூலஸ்தானத்தில் வைத்து நேற்று(03.07.2023) வரையான ஒரு வார காலத்திற்கு கடல் நீரில் விளக்கெரித்து பொங்கல் பொங்கும் சம்பிரதாயபூர்வ வைபவம் இடம்பெற்றது.
இதன்போது பெருமளவான பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி கண்ணகி அம்மனுக்காக பொங்கல் பொங்கி படைத்து வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
நயினாதீவு நாகபூசணி அம்மன்
வரலாற்று சிறப்புமிக்க பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவின் பதினைந்தவது திருவிழாவாகிய கொடியிறக்கம் நேற்று இரவு இடம்பெற்றது.
இவ் ஆலயமஹோற்சவ கொடியேற்றம் கடந்த 19.06.2023 அன்று இடம்பெற்று, பதினாறு தினங்கள் திருவிழா நடைபெற்று வந்த நிலையில், ஜுலை 03 ஆம் திகதியன்று அன்று மாலை கொடியிறக்கத்துடன்இனிதே மஹோற்சவம் நிறைவடைகிறது.
இதில் நயினாதீவு நாகபூசணி அம்மன், இடபவாகனத்தில் வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பல பாகங்களில் வருகைதந்த பக்தர்கள் அப்பாளை பக்திபூர்வமாக தரிசித்து அருள்கடாச்சத்தினை பெற்றுச்சென்றனர்.
செய்தி-கஜிந்தன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |







