ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க இது சரியான நேரம் அல்ல - பந்துல குணவர்தன
2020 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருவாயில் 86 சதவிகிதம், வேதனம் வழங்குவதற்காகச் செலவிடப்பட்டது, இது நாட்டிற்கான பொது நிதிப்பிரச்சனையை ஏற்படுத்தியது.
எனவே ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க இது சரியான நேரம் அல்ல என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பாடசாலை ஆசிரியர்களுக்கான 100 சதவீத ஊதிய உயர்வுக்குத் தாம் முழுமையாக உடன்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆனால் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பொருளாதார நெருக்கடியின் ஆழத்தைக் கருத்தில் கொண்டு இது சாத்தியமற்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நலன்புரி நடவடிக்கைகளை அதிகரிக்க விரும்பினால் அரசாங்கத்திற்கு மேலும் வரிவிதிப்புகளை மேற்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
எனினும் வரிவிதிப்பு என்பது மக்களுக்கு மேலும் சுமையாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.