கந்தளாயில் மூன்றாவது கோவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு
திருகோணமலை - கந்தளாய் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மூன்றாவது கோவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று (1) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது பைசர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
அத்தோடு தடுப்பூசி செலுத்தாதவர்கள் மற்றும் ஒரு முறை தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்களுக்கும் இரண்டாவது தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டன.
அதிகமான அறுபது வயதைத் தாண்டிய முதியவர்கள் ஆர்வத்தோடு தடுப்பூசிகளைப்
பெற்றுக் கொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.