புத்தரின் தேசத்தில் வாழும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள்.. தேரரின் சர்ச்சைக்குரிய உரை!
புத்தருக்கு சொந்தமான இலங்கை பூமியில் தான் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் நேற்றையதினம் நடந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“திருகோணமலை சம்பவம் பௌத்த மதத்தின் உரிமையை கேள்விக்குறியாக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக புத்தர் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு மீண்டும் சம்பிரதாயத்திற்காக அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி சம்பவம்
கலவரத்தின் போது, அதிகாரத்துடன் செயற்பட்ட பொலிஸாருக்கும் அவர்களை அனுப்பிய அரசாங்கத்திற்கும் நாம் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்.

பௌத்த மதம் இலங்கையில் பல ஆண்டுகளாக உள்ளது. புத்தருக்கு சொந்தமான இலங்கை பூமியில் தான் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர். புத்தர் சிலையை அகற்றுமாறு கலவரம் செய்தவர்களால் தாக்கப்பட்ட பல தேரர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் தேரர்களை தாக்கும் காணொளிகள் வெளியாகியுள்ளன. இது மிகவும் பௌத்த வணக்கஸ்தலத்தை கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ள ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

அரசாங்கமே மக்களை தூண்டுகின்றது. அரசாங்கத்தின் பலம் 5 வருடங்களுக்கே உள்ளது. ஆனால், பௌத்த மதத்தின் உரிமை 2 ஆயிரம் ஆண்டுகளாக இலங்கையில் உள்ளது. புதுடெல்லியில் அண்மையில் குண்டு வெடித்ததை போன்று இலங்கையிலும் நடக்காது என்பதற்கு என்ன நிச்சயம்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இருக்கும் பிரச்சனையில் பழைய வில்லன் என்ட்ரி, நந்தினி, ரேணுகா எப்படி சமாளிக்க போகிறார்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam