உதவி பொலிஸ் அத்தியட்சகர் எரிக் பெரேராவின் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு கிடையாது - சரத் வீரசேகர
உதவி பொலிஸ் அத்தியட்சகர் எரிக் பெரேராவின் இடமாற்றத்தில் அரசியல் தலையீடுகள் எதுவும் கிடையாது என பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
சிலாபம் பிரதேசத்தில் கடமையாற்றி வந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் எரிக் பெரேரா அரசியல் தேவைகளுக்காக இடமாற்றம் செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பொலிஸ் திணைக்களத்தில் இடமாற்றங்கள் நடைபெறுவது சாதாரண விடயம் எனவும் அவ்வாறான ஓர் சாதாரண இடமாற்ற உத்தரவே இது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிலாபம் பிரதேசத்திற்காக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உதவி பொலிஸ் அத்தியட்சகரும் திறமையான ஓர் அதிகாரி அவர் தெரிவித்துள்ளார். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எரிக் பெரேராவை இடமாற்றம் செய்யுமாறு ராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ உள்ளிட்டவர்கள் கோரிக்கை விடுத்த கடிதங்கள் அண்மையில் ஊடகங்களில் வெளியிடப்பட்டது.
அமைச்சர் அருந்திக்க எரிக் பெர்னாண்டோவுடன் தொலைபேசியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம் என கோரும் ஒலிப்பதிவு ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
