எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பாதிப்படைந்துள்ள கடற்றொழிலாளர்கள்(Video)
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தமது கடற்றொழில் நடவடிக்கைகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக பூநகரி பிரதேச கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் நிலவுகின்ற எரிபொருள் பற்றாக்குறை காரணமாகப் பெருமளவான தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இரணைமாதா நகர், பள்ளிக்குடா, நாச்சிக்குடா, கிராஞ்சி வேரவில், வலைப்பாடு போன்ற பகுதிகளில் கடற் தொழிலாளர்கள் தங்களுக்கான எரிபொருளைப் பெற்றுக் கொள்வதில் தொடர்ந்தும் நெருக்கடி நிலை காணப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.
தமது தொழிலை நடவடிக்கைகளுக்காக சென்று வருவதற்குத் தேவையான எரிபொருள் இல்லாத நிலையில், தாங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருந்தும் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருளை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிகின்றது. இது தங்களுடைய தொழில் நடவடிக்கைகளுக்கு போதுமானதாக இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆனாலும் தனியார் வர்த்தக நிலையங்களிலும் போதிய அளவு எரிபொருளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த வாரம் குறைந்த அளவு எரிபொருளைக் கொண்டு கடற்றொழிலில் ஈடுபட்ட ஒருவர், எரிபொருள் தீர்ந்து விட்டதால் குறித்த படகு நீண்ட நேரத்தின் பின்னர் இரணைதீவு பகுதியில் கரையொதுங்கிய பின்னர் சக தொழிலாளர்களால் காப்பாற்றப்பட்டார்.
எவ்வாறாயினும் எரிபொருள் நெருக்கடிகளையும் கஷ்டங்களையும் எதிர்கொண்டு
தங்களால் பிடிக்கப்படும் கடலுணவுகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை எனவும் இவ்வாறு
எரிபொருள் இன்மை காரணமாக தாங்கள் தொடர்ந்தும் பெரும் பொருளாதார ரீதியாகவும்
பாதிக்கப்பட்டிருப்பதாக இப்பிரதேச கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.





தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
