கோண்டாவில் பகுதியில் திருட்டு சம்பவம்: பொலிஸாரின் அதிரடி செயல்(Photo)
யாழ்ப்பாணம்-கோண்டாவில் பகுதியில் திருடப்பட்ட 20 இலட்சம் ரூபா பெறுமதியான கட்டிட பொருட்கள் கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
கடந்தவாரம் கோண்டாவில் பகுதியில் ஒப்பந்தகாரர் ஒருவரினால் வேலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த பெறுமதியான கட்டிட பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
கட்டிட பொருட்கள்
இதன்போது, நிலமாபிள்கள், கழிவறைக்கு பயன்படுத்தும் உபகரணங்கள், மின் மோட்டார் மற்றும் மின் வயர்கள், இலத்திரனியல் உபகரணங்கள் உள்ளடங்களாக சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான கட்டிட பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
புலனாய்வு பிரிவினர்
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் துரிதமாக செயற்பட்ட கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் குறித்த திருட்டுடன் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளதோடு திருடப்பட்ட பொருட்களையும் மீட்டுள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
