கொழும்பில் தனக்கு தானே தீ வைத்துக்கொண்டு இளைஞரொருவர் தற்கொலைக்கு முயற்சி
கொழும்பு-கறுவாத்தோட்டம் பிரதேசத்தில் இளைஞரொருவர் தனக்கு தானே தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது தீக்காயங்களுக்கு உள்ளான அந்நபரை பிரதேச மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தீக்காயங்களுக்கு உள்ளான நபர் தொடர்பான தகவல்களை திரட்டி வருவதாகவும், காயமடைந்த நபரின் நிலைமை கவலைக்குரியதாக இல்லையெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் எதற்காக தீ வைத்துக்கொண்டார் என்பது தொடர்பில் இதுவரையில் தகவல்கள் வெளியாகவில்லை என்பதோடு, அவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கறுவாத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri
