கணவனை கொடூரமாக கொலை செய்த இளம் மனைவியால் பரபரப்பு
ஹொரணை, மல் பெரிகம பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக வீடொன்றில் வைத்து மனைவியொருவர் தனது கணவரை படுகொலை செய்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படுக்கையில் வைத்தே கணவனின் கழுத்தை சட்டையால் நெறித்து கொலை செய்துள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு பிள்ளையின் தந்தையான 30 வயதான வசந்த குமார என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் முன்னாள் இராணுவ வீரர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறினை அடுத்து இரவு உறங்கச் சென்ற வேளையில் மனைவி இந்தக் கொலையைச் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரின் மனைவி ஹொரணை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam