வங்குரோத்தடைந்த இலங்கையின் மோசமான செயல்! சர்வதேச ஊடகங்கள் சாடல்
வங்குரோத்தடைந்த இலங்கை குறைந்த வயதுடைய பெண்களை வெளிநாட்டு பணிக்கு அனுப்புவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெளிநாட்டு நாணய தட்டுப்பாடு காரணமாக இலங்கை நிதி ரீதியாக திவாலாகியுள்ளது.
வயதெல்லை குறைப்பு
இந்த நிலையில், வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் பெண்களின் குறைந்தபட்ச வயதை 21 ஆகக் குறைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வருடாந்தம் வெளிநாட்டு பணியாளர்கள் ஊடாக 7 பில்லியன் டொலர் கிடைக்கின்றன. எனினும் கொரோனா தொற்றின் பின்னர் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கமைய வருடாந்தம் கிடைக்கும் வருமானம் பாரியளவு குறைவடைந்துள்ளது.
சர்வதேச ஊடகங்கள் சாடல்
இந்த நிலையிலேயே அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.