பொலிஸ் அதிகாரி ஒருவரின் மிக மிக மோசமான செயல்!
பாணந்துறை பகுதியில் இரண்டு பாடசாலை மாணவிகளுக்கு தனது அந்தரங்க பகுதியை காண்பித்ததாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரகஹஹேன பகுதியைச் சேர்ந்த 36 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் காரில் இருந்தவாறு, அந்த பகுதியாக சென்ற பாடசாலை மாணவிகளுக்கு தனது அந்தரங்க பகுதியை காண்பித்துள்ளதாக முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பாடசாலை மாணவிகள் தனது அதிபரை தெளிவூட்டிய நிலையில், சம்பவம் தொடர்பில் அதிபர் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார்.
இந்த பகுதியிலுள்ள சிசிடிவி கெமராவை ஆய்வு செய்த நிலையில், சந்தேகநபரான பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 12 மணி நேரம் முன்

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை யார் தெரியுமா Cineulagam

பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, ரூட்டை மாற்றிய பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன்... வைரலாகும் வீடியோ Cineulagam

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க Cineulagam
