இலங்கையர்களிடம் ஐ.நா சபை விடுத்துள்ள கோரிக்கை
ஐக்கிய நாடுகள் சபையின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்தி பணம், தனிப்பட்ட தகவல்களைக் கேட்டு மோசடி செய்பவர்களிடம் கவனமாக இருக்குமாறு அந்த அமைப்பின் இலங்கை அலுவலகம் வலியுறுத்துகிறது.
சமூக ஊடகங்கள், குறுஞ்செய்தி சேவைகள், இணையத்தளங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் அமைப்பின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்தி மோசடியான மற்றும் தவறான தகவல்கள் மீண்டும் பரப்பப்படுவதை அவதானித்ததாக அமைப்பு அறிவித்துள்ளது.
எனவே, தங்கள் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்தி பணத்தைப் பெறுவதற்கான சூழ்நிலைகள் உள்ளமையினால் தனிப்பட்ட தகவல்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கையர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதிர்வலைகளை ஏற்படுத்திய சனல் 4 காணொளி: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிவரும் உண்மைகள்(Video)
ஆட்சேர்ப்பு செயல்முறை
ஐக்கிய நாடுகள் சபை தனது ஆட்சேர்ப்பு செயல்முறையின் எந்தவொரு கட்டத்திலும் கட்டணம் வசூலிப்பதில்லை என்றும் சீட்டிழுப்பு அல்லது பல்வேறு மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில்லை எனவும் தொடர்புடைய அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! 12 மணி நேரம் முன்
சொதப்பிய மெஸ்ஸி: கடைசி நிமிடங்களில் மேஜிக்.. சுவிஸை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம் News Lankasri
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan