ஹிஷாலினி விவகாரத்தில் திருப்பம்? - பிரபல சட்டத்தரணி வெளியிட்டுள்ள தகவல்
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த சிறுமி உயிரிழந்து விட்டதால் அவர் மீது பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருந்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க இதனை தெரிவித்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த சிறுமி தனக்கு தானே தீவைத்து கொண்டுள்ளதாக வைத்தியரிடம் கூறியுள்ளதாகவும் சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். அதனை சாட்சியாக வைத்து வழக்கில் இது ஒரு தற்கொலை என்றே கருதப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஊடகங்கள் ஹிஷாலினியை 15 வயது சிறுமி என்று கூறுகின்ற போதும் அவர் 16 வயது பூர்த்தி செய்த யுவதி என சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri